Wednesday, January 15, 2020

அனிஷா மரைக்காயர்

இலங்கை தமிழ் முஸ்லிம் சார்ந்த படைப்புகளை விரும்பி படிப்பதுண்டு. முன்பு ஒரு முறை தீரன் நவ்சாத் எழுதிய ஒரு சிறுகதை தொகுப்பு ‘வெள்ளிவிரல்’ மற்றும் அவரது ‘கொல்வதெழுதல்’ நாவல் படித்ததுண்டு.
அவரது வெள்ளிவிரல் சிறுகதை படித்துவிட்டு ஒரு நாள் முழுவதும் சிரித்து கொண்டிருந்தேன். அதன் தாக்கத்திலே ‘உலக புகழ்பெற்ற முதலைமார்க்கு ஜட்டிகாரன்’ எழுதவும் தோன்றியது .