Ukuwelai Akram
வெள்ளிவிரல் சுட்டி நிற்கும் கதைகள் யாவும் கனதிமிக்கவை.அதிலும் தன் பிரதேச மொழிவழக்கை கதைகளில் நகர்த்தும் அந்த சூட்சுமே கருவுக்கான உயர் பெறுமானமாக தொய்வின்றி நகர்த்தி,வாசகனை தன்னெழுத்துக்குள் முகிழ்க்கும் மந்திரமாகிறது.கதைகள் ஒவ்வொன்றும் நம்முள் நிகழ்ந்ததாகவும்,நம் அல்லசலில் நடந்தேறிய நிகழ்வுகளாக நம்மில் பதியமிடுவதால் கதையைவிட்டு நம் சிந்தனை வெளியேறாமல் திமிர்கிறது.
இத்திறமை தேர்ந்த கதை சொல்லிகளால் மாத்திரமே நிகழக்கூடிய சாத்தியமுண்டு.அது தீரனுக்கு கைவந்த கலையாகி நெஞ்சை நிமிர்த்தி வீறுநடைபோடுகிறது.கதைகளில் இழையோடும் நகைச்சுவைப்போக்கு கதைக்கு வெளிதாண்டிடாமல் கதைகளோடு இயைந்து போவதும் தொகுதிக்கு கனதி சேர்க்கிறது.தீரனின் சொற்களைப்போன்றே கதையும் கருவும் அது நடந்தேறும் சூழலும் வைரமிக்கவை.காலத்தால் கரைத்திட முடியாத வீர்யமிக்க கதைகளின் தொகுதி.